பால்குடி டேஸ் (PAAL KUDI DAYS) -
தருமபுரி நினைவுகள் - 2
ஒண்ணாம்பு முடிச்சு லீவு விட்டாங்க. மெட்றாஸ், திருச்சின்னு லீவுக்கு ஊருக்கு போயிட்டு கொட்டம் அடிச்சோம். ஸ்கூலு தெறந்துச்சு. ஆஹா ரெண்டாம்ப்பு போறோம்னு ஜாலியா ஸ்கூலுக்குப் போனேன். அங்க போனா பெரிய அதிர்ச்சி. எனக்கு மட்டும் இல்ல என் க்ளாஸ் பசங்களுக்கும்தான். ஒண்ணாம் க்ளாஸ்ல (இப்ப பெரிய ஆளாயிட்டோம்ல, அதுனால க்ளாஸ்) A செக்ஷன்ல படிச்ச எங்களை ரெண்டாம் க்ளாஸ்ல B செக்ஷன்ல போட்டாங்க. என்ன ஒரு கேவலம். போயும் போயும் B செக்ஷனா? நான் ஆத்திரம் (அழுகை) தாங்காம மறுபடியும் ஒண்ணாம் க்ளாஸுக்கே போய் உக்காந்துட்டேன். அமிர்தம் டீச்சர் என்ன ஏதுன்னு கேட்டு சமாதானப்படுத்தி அந்த டீச்சரும் நல்லவுங்கதான்னு சொல்லி ரெண்டாம் க்ளாஸ்ல கொண்டு போயி விட்டாங்க. அரை மனசோட போய் உக்காந்தேன். அன்னிக்கு பாடம் எதுவும் நடத்தலை. எல்லார் பேரும் கேட்டாங்க. சொன்னோம். இன்டரவேலு (INTERVAL) விட்டாங்க. வீட்டுக்கு வந்தவன் மதியம் திரும்பி ஸ்கூலுக்கு போகல. வீட்டுலேயும் முதல் நாளுதானேன்னு கண்டுக்கல.
மறுநாள் என்னதான் நடக்குதுன்னு பாக்கலாமேன்னு வீரத்தோட ஸ்கூலுக்கு போனோம் நானும் என் நண்பர்களும் (உபேந்திரன், சுப்ரமணி, மாதேஸ்வரன்). மொதோ பிரீடு (PERIOD) தமிழ். ஓகே. ரெண்டாவது பிரீடு வந்துச்சி. அதுக்கு வேற ஒரு டீச்சரு வந்தாங்க. இப்பதான் வாழ்க்கைல பெரிய அதிர்ச்சியை சந்திச்சோம் நானும் உபேந்திரனும். கணக்குன்னு ஒரு பாடத்தை ஆரம்பிச்சாங்க. முதல்ல ரெண்டாம் வாய்ப்பாடு எழுதி போட்டாங்க போர்ட்ல. அத எழுதிக்க சொன்னாங்க. நமக்கு புரியல. அப்பறம் அதை டீச்சர் நாலஞ்சு தடவ சொல்லிட்டு எங்களை திருப்பி சொல்ல சொன்னாங்க. ஒரு மாதிரி அந்த பிரீடும் முடிஞ்சுது. போறப்ப அந்த வாய்ப்பாட மறுநாள் வீட்டுப் பாடமா எழுதிட்டு வர சொன்னாங்க. இங்கதான் ஆரம்பிச்சிச்சி சனியன் நமக்கு. (அப்பவே 7 1/2 போல).
மறுநாள் எல்லார் ஸ்லேட்டையும் காமிக்க சொன்னாங்க. எல்லாரும் வாய்ப்பாடு எழுதிட்டு வந்தா நானும் உபேந்திரனும் மட்டும் ஒன்னு, ரெண்டு 100 வரைக்கும் எழுதிட்டு வந்தோம். ஏன்ன்னு கேட்டதுக்கு அப்படிதான், எங்களுக்கு இதுதான் தெரியும்னு சொன்னோம். அன்னிக்கு டீச்சர் நல்ல மூட்ல இருந்தாங்க போல. தம்பி இப்படி எல்லாம் செய்யக் கூடாதுன்னு. சொன்னபடி கேக்கணும்னு சொல்லிட்டு அன்னிக்கு 3 ஆம் வாய்ப்பாடு. என்னடா தலைவலி போயி திருகு வலி வந்துடுச்சேன்னு புலம்பிக்கிட்டே வீட்டுக்கு வந்து சாப்பிட்டோம். சாப்பிட்டு விளையாட கிளம்பினவன பாட்டி தரதரன்னு இழுத்துட்டு போய் ஸ்கூல்ல விட்டாங்க (கட்டல போறவனேன்னு திட்டிக்கிட்டே).
மதிய வகுப்புகளுக்கு இன்னொரு டீச்சர். அவங்க இயற்கை, (SCIENCE), பூகோளம், எல்லாம் நடத்தினாங்க. அதெல்லாம் என்னவோ கண்ணக் கட்டி காட்டுல விட்டா மாதிரி இருந்துச்சி. ஆனா அந்த டீச்சர் நல்லவங்க போல. வீட்டுப் பாடம் எதுவும் தரல.
இப்படியே வாய்ப்பாடு, தமிழ்ப் பாடம், இயற்கை, பூகோளம், சரித்திரம்னு வகுப்புகள் போயிட்டிருந்துச்சி. 30 - 40 நாள் போயிருக்கும். இன்டரவேலு விட்டா ரோட்ல மனேரியான்னு ஒரு பொம்பள விக்கற, ஜவ்வு மிட்டாய், கமர்கட், கோணப் புளியங்காய், எலந்தவடைன்னு வாங்கித் தின்போம். டீச்சர் சொல்வாங்க, "டேய், மனேரியாகிட்ட வாங்கித் தின்னா மலேரியா வரும்டா"ன்னு. அதெல்லாம் கண்டுக்க மாட்டோம். வாரம் ஒரு நாள் குச்சி ஐஸ், சேமியா ஐஸ்.
திடீர்னு ஒருநாள் இன்னிக்கு உங்களுக்கு கூட்டல் கணக்கு சொல்லித் தரப் போறேன்னு டீச்சர் ஆரம்பிச்சாங்க. என்னடா தகடூருக்கு வந்த சோதனைன்னு நெனச்சுக்கிட்டே கவனிச்சோம். ஒன்னும் புரியல. புரியாம ஒரு வாரம் ஓடிடுச்சி. மறுநாள் கணக்குல பரீச்சைனு சொன்னாங்க. அதெல்லாம் நமக்கு டோன்ட் கேர். 2 கூட்டல் கணக்கு குடுத்து விடை எழுதி ஸ்லேட்டை கொண்டு வந்து டீச்சர்கிட்ட வைக்க சொன்னாங்க. நான் ஒரு ஐடியா செஞ்சேன். டீச்சர் சொன்ன உடனே மொதோ ஆளா ஸ்லேட்டை கொண்டு போய் வெச்சேன். எல்லாரும் வரிசையா கொண்டு போய் என் ஸ்லேட் மேல அவங்க ஸ்லேட்டை அடுக்கவே என்னுது அடில போச்சு. டீச்சர் ஒரு பையன கூப்டு அவனை விடைகளை போர்ட்ல எழுத சொன்னாங்க. உடனே நான் "டீச்சர், என் ஸ்லேட்ல பேர் எழுத மறந்துட்டேன்னு சொல்லி ஸ்லேட்டை எடுத்துக்கிட்டு வந்து அவன் விடை எழுதினவுடனே அதை பாத்து காப்பி அடிச்சு எழுதி கொண்டு போய் வெச்சுட்டேன். இப்படி ஒரு வாரம் ஓடியிருக்கும். ஒரு நாள் இப்படி செய்யும்போது பக்கத்துல இருந்த பையன் பாத்துட்டு டீச்சர் இவன் காப்பி அடிக்கறான்னு சொல்லிட்டான் (நம்ம வீரபாண்டியனோ இல்லையோ, நம்மள சுத்தி எட்டப்பர்கள் எப்பவுமே ஜாஸ்தி). டீச்சர் கூப்பிட்டு என்னை போர்ட்ல விடை எழுத சொன்னாங்க. நான், டீச்சர் எனக்கு தெரியாது, எனக்கு கணக்கு வரலைன்னு சொன்னேன். டீச்சர் அடிக்கல, திட்டல. தம்பி, நல்ல படிக்கணும்பா, இதெல்லாம் தெரிஞ்சாதான் படிக்க முடியும்னு சொல்லிட்டு விட்டாங்க.
அதே ஸ்கூல்ல என் அண்ணன் 3 ஆவது A, அக்கா 5 ஆவது A (அதுல பெருமை வேற) படிச்சிட்டிருந்தாங்க. அவங்க வீட்டுல வந்து போட்டுக் குடுத்துட்டாங்க. எங்க அம்மா பொறுமையா சாக்பீஸ், சாக்லேட் எல்லாம் வெச்சு கூட்டல் கணக்கு சொல்லிக் குடுத்தாங்க. கொஞ்ச நாள்ல நல்லா கத்துக்கிட்டேன்.
இப்படியா நம்ம ரெண்டாம் க்ளாஸ் நல்லபடியா போயிட்டிருந்துச்சி.
தொடரும்.
தருமபுரி நினைவுகள் - 2
ஒண்ணாம்பு முடிச்சு லீவு விட்டாங்க. மெட்றாஸ், திருச்சின்னு லீவுக்கு ஊருக்கு போயிட்டு கொட்டம் அடிச்சோம். ஸ்கூலு தெறந்துச்சு. ஆஹா ரெண்டாம்ப்பு போறோம்னு ஜாலியா ஸ்கூலுக்குப் போனேன். அங்க போனா பெரிய அதிர்ச்சி. எனக்கு மட்டும் இல்ல என் க்ளாஸ் பசங்களுக்கும்தான். ஒண்ணாம் க்ளாஸ்ல (இப்ப பெரிய ஆளாயிட்டோம்ல, அதுனால க்ளாஸ்) A செக்ஷன்ல படிச்ச எங்களை ரெண்டாம் க்ளாஸ்ல B செக்ஷன்ல போட்டாங்க. என்ன ஒரு கேவலம். போயும் போயும் B செக்ஷனா? நான் ஆத்திரம் (அழுகை) தாங்காம மறுபடியும் ஒண்ணாம் க்ளாஸுக்கே போய் உக்காந்துட்டேன். அமிர்தம் டீச்சர் என்ன ஏதுன்னு கேட்டு சமாதானப்படுத்தி அந்த டீச்சரும் நல்லவுங்கதான்னு சொல்லி ரெண்டாம் க்ளாஸ்ல கொண்டு போயி விட்டாங்க. அரை மனசோட போய் உக்காந்தேன். அன்னிக்கு பாடம் எதுவும் நடத்தலை. எல்லார் பேரும் கேட்டாங்க. சொன்னோம். இன்டரவேலு (INTERVAL) விட்டாங்க. வீட்டுக்கு வந்தவன் மதியம் திரும்பி ஸ்கூலுக்கு போகல. வீட்டுலேயும் முதல் நாளுதானேன்னு கண்டுக்கல.
மறுநாள் என்னதான் நடக்குதுன்னு பாக்கலாமேன்னு வீரத்தோட ஸ்கூலுக்கு போனோம் நானும் என் நண்பர்களும் (உபேந்திரன், சுப்ரமணி, மாதேஸ்வரன்). மொதோ பிரீடு (PERIOD) தமிழ். ஓகே. ரெண்டாவது பிரீடு வந்துச்சி. அதுக்கு வேற ஒரு டீச்சரு வந்தாங்க. இப்பதான் வாழ்க்கைல பெரிய அதிர்ச்சியை சந்திச்சோம் நானும் உபேந்திரனும். கணக்குன்னு ஒரு பாடத்தை ஆரம்பிச்சாங்க. முதல்ல ரெண்டாம் வாய்ப்பாடு எழுதி போட்டாங்க போர்ட்ல. அத எழுதிக்க சொன்னாங்க. நமக்கு புரியல. அப்பறம் அதை டீச்சர் நாலஞ்சு தடவ சொல்லிட்டு எங்களை திருப்பி சொல்ல சொன்னாங்க. ஒரு மாதிரி அந்த பிரீடும் முடிஞ்சுது. போறப்ப அந்த வாய்ப்பாட மறுநாள் வீட்டுப் பாடமா எழுதிட்டு வர சொன்னாங்க. இங்கதான் ஆரம்பிச்சிச்சி சனியன் நமக்கு. (அப்பவே 7 1/2 போல).
மறுநாள் எல்லார் ஸ்லேட்டையும் காமிக்க சொன்னாங்க. எல்லாரும் வாய்ப்பாடு எழுதிட்டு வந்தா நானும் உபேந்திரனும் மட்டும் ஒன்னு, ரெண்டு 100 வரைக்கும் எழுதிட்டு வந்தோம். ஏன்ன்னு கேட்டதுக்கு அப்படிதான், எங்களுக்கு இதுதான் தெரியும்னு சொன்னோம். அன்னிக்கு டீச்சர் நல்ல மூட்ல இருந்தாங்க போல. தம்பி இப்படி எல்லாம் செய்யக் கூடாதுன்னு. சொன்னபடி கேக்கணும்னு சொல்லிட்டு அன்னிக்கு 3 ஆம் வாய்ப்பாடு. என்னடா தலைவலி போயி திருகு வலி வந்துடுச்சேன்னு புலம்பிக்கிட்டே வீட்டுக்கு வந்து சாப்பிட்டோம். சாப்பிட்டு விளையாட கிளம்பினவன பாட்டி தரதரன்னு இழுத்துட்டு போய் ஸ்கூல்ல விட்டாங்க (கட்டல போறவனேன்னு திட்டிக்கிட்டே).
மதிய வகுப்புகளுக்கு இன்னொரு டீச்சர். அவங்க இயற்கை, (SCIENCE), பூகோளம், எல்லாம் நடத்தினாங்க. அதெல்லாம் என்னவோ கண்ணக் கட்டி காட்டுல விட்டா மாதிரி இருந்துச்சி. ஆனா அந்த டீச்சர் நல்லவங்க போல. வீட்டுப் பாடம் எதுவும் தரல.
இப்படியே வாய்ப்பாடு, தமிழ்ப் பாடம், இயற்கை, பூகோளம், சரித்திரம்னு வகுப்புகள் போயிட்டிருந்துச்சி. 30 - 40 நாள் போயிருக்கும். இன்டரவேலு விட்டா ரோட்ல மனேரியான்னு ஒரு பொம்பள விக்கற, ஜவ்வு மிட்டாய், கமர்கட், கோணப் புளியங்காய், எலந்தவடைன்னு வாங்கித் தின்போம். டீச்சர் சொல்வாங்க, "டேய், மனேரியாகிட்ட வாங்கித் தின்னா மலேரியா வரும்டா"ன்னு. அதெல்லாம் கண்டுக்க மாட்டோம். வாரம் ஒரு நாள் குச்சி ஐஸ், சேமியா ஐஸ்.

திடீர்னு ஒருநாள் இன்னிக்கு உங்களுக்கு கூட்டல் கணக்கு சொல்லித் தரப் போறேன்னு டீச்சர் ஆரம்பிச்சாங்க. என்னடா தகடூருக்கு வந்த சோதனைன்னு நெனச்சுக்கிட்டே கவனிச்சோம். ஒன்னும் புரியல. புரியாம ஒரு வாரம் ஓடிடுச்சி. மறுநாள் கணக்குல பரீச்சைனு சொன்னாங்க. அதெல்லாம் நமக்கு டோன்ட் கேர். 2 கூட்டல் கணக்கு குடுத்து விடை எழுதி ஸ்லேட்டை கொண்டு வந்து டீச்சர்கிட்ட வைக்க சொன்னாங்க. நான் ஒரு ஐடியா செஞ்சேன். டீச்சர் சொன்ன உடனே மொதோ ஆளா ஸ்லேட்டை கொண்டு போய் வெச்சேன். எல்லாரும் வரிசையா கொண்டு போய் என் ஸ்லேட் மேல அவங்க ஸ்லேட்டை அடுக்கவே என்னுது அடில போச்சு. டீச்சர் ஒரு பையன கூப்டு அவனை விடைகளை போர்ட்ல எழுத சொன்னாங்க. உடனே நான் "டீச்சர், என் ஸ்லேட்ல பேர் எழுத மறந்துட்டேன்னு சொல்லி ஸ்லேட்டை எடுத்துக்கிட்டு வந்து அவன் விடை எழுதினவுடனே அதை பாத்து காப்பி அடிச்சு எழுதி கொண்டு போய் வெச்சுட்டேன். இப்படி ஒரு வாரம் ஓடியிருக்கும். ஒரு நாள் இப்படி செய்யும்போது பக்கத்துல இருந்த பையன் பாத்துட்டு டீச்சர் இவன் காப்பி அடிக்கறான்னு சொல்லிட்டான் (நம்ம வீரபாண்டியனோ இல்லையோ, நம்மள சுத்தி எட்டப்பர்கள் எப்பவுமே ஜாஸ்தி). டீச்சர் கூப்பிட்டு என்னை போர்ட்ல விடை எழுத சொன்னாங்க. நான், டீச்சர் எனக்கு தெரியாது, எனக்கு கணக்கு வரலைன்னு சொன்னேன். டீச்சர் அடிக்கல, திட்டல. தம்பி, நல்ல படிக்கணும்பா, இதெல்லாம் தெரிஞ்சாதான் படிக்க முடியும்னு சொல்லிட்டு விட்டாங்க.
அதே ஸ்கூல்ல என் அண்ணன் 3 ஆவது A, அக்கா 5 ஆவது A (அதுல பெருமை வேற) படிச்சிட்டிருந்தாங்க. அவங்க வீட்டுல வந்து போட்டுக் குடுத்துட்டாங்க. எங்க அம்மா பொறுமையா சாக்பீஸ், சாக்லேட் எல்லாம் வெச்சு கூட்டல் கணக்கு சொல்லிக் குடுத்தாங்க. கொஞ்ச நாள்ல நல்லா கத்துக்கிட்டேன்.
இப்படியா நம்ம ரெண்டாம் க்ளாஸ் நல்லபடியா போயிட்டிருந்துச்சி.
தொடரும்.
