பால்குடி டேஸ் (PAALKUDI DAYS) -
தருமபுரி நினைவுகள்.
தருமபுரி (தர்ம்ப்ரி) பத்தி எனக்கு ரெண்டு வயசுலேர்ந்தே ஞாபகம் இருக்குன்னு சொன்னா நம்பணும். தர்மபுரில நான் ஆஸ்பத்திரில பொறக்காம எங்க வீட்டுல ஒரு மூலைலேயே பொறந்தேனாம். அதுனாலதானோ என்னவோ எனக்கு ஊர் மேலயும், வீட்டு மேலயும் பாசம் ஜாஸ்தி. ஊர விட்டு வந்து 33 வருஷம் ஆகியும் இன்னும் கனவுல எங்க வீடு வரும். எந்த நிகழ்ச்சி நடந்தாலும் அங்க நடக்கற மாதிரி கனவு வரும்.
எங்க தெரு 20 பிளாட்டுங்கள்ல ஒரு 30 வீடுகள் கொண்ட தெரு. BLIND STREET ங்கிற முட்டு சந்து. அதுல தெரு ஆரம்பத்துல மொதோ வீடு எங்களுது. முட்டு சந்துங்கிறதுனால தெருக் கடசில கொழந்தைங்களை எல்லாம் தைரியமா வெளயாட விடுவாங்க. சரி நம்மளப் பத்தி விஷயத்துக்கு வருவோம்.
நம்ம பால்குடி டேஸ் சுவாரஸ்யமாதான் இருந்திருக்கு. ஒரு அக்கா, அப்பறம் அண்ணன், கடைக்குட்டி நானு. பொறக்கும்போதே ஐயா வெயிட் பார்ட்டி. கஷுக்கு முஷுக்குன்னு. நம்ம பொறந்தப்ப குடும்பத்துல கொஞ்சம் கஷ்டம் (பொறக்கும்போதேவா). அதுனால பால், ஹார்லிக்ஸ், போர்ன்விட்டா மாதிரி காஸ்டலி பானங்கள் கெடயாது. ஜவ்வரிசி கஞ்சிதான். அது இன்னும் நம்மள தாட்டியா ஆக்கிடுச்சு. நம்ம உடன்பிறப்புகள் எல்லாம் பாவம், ஈர்குச்சி மாதிரி. அப்பல்லாம் ஊதுபத்தி தகரக் குழாய்லதான் வரும். அதை எடுத்துக்கிட்டு பாசத்தோட அக்காவையும் அண்ணனையும் அவங்க அலற அலற தொரத்திக்கிட்டு ஓடுவேனாம். அதுலேர்ந்து அவங்களுக்கு விடுதலை வேணும்னு அவங்களை சீக்கிரமே ஸ்கூல்ல போட்டாங்க. நமக்கு பொழுது போகல. என்ன செய்யறது. வீட்டுல இருக்கற கரண்டிகளை எடுத்து வெச்சுக்கிட்டு கூடத்துல உக்காந்துக்கிட்டு வாசப் பக்கம் இருக்கற ஜன்னல் வழியா,, ஜன்னல் கம்பில படாம THROW அடிக்க வேண்டியதுதான். யாராவது எதிர்வீட்டுக்காரங்க பாத்தா அதெல்லாம் திருப்பி வரும் வீட்டுக்கு. இல்லேன்னா அதெல்லாம் நாட்டுக்கு. நான் பெரிய கிரிக்கெட் வீரனா வருவேன்னு நெனைச்சாங்க இதை வெச்சு (எங்க, மரத்துல மாங்கா அடிக்கதான் இந்த THROW பயன்பட்டுச்சு)
எவ்வளவு நாளைக்கு இதெல்லாம் நடக்கும்? அலுப்பு தட்டிடுச்சு. நானும் ச்சூலுக்குப் போவேன்னு அடம் புடிச்சேன். நம்ம அடம் தாங்காம நர்சரி (அப்பல்லாம் எல் கே ஜி கெடையாது) ச்சூல்ல சேத்து விட்டாங்க. ச்சூலுக்குப் போன ஒடனே ஒரே ஒரு பாட்டு, நிலா நிலா ஓடி வா, அப்பறம் தூங்க வெச்சுடுவாங்க, எழுந்தவுடனே மிட்டாய் எல்லாருக்கும் குடுப்பாங்க. எனக்கு மட்டும் இல்ல. நான் டீச்சர் கிட்ட கேட்டேன். அதுக்கு உங்க அம்மாவைக் கேளுன்னு திட்டினாங்க. (ஸ்கூல்ல விடறப்ப அம்மா குடுத்துட்டுப் போனாதான் நமக்கு தருவாங்களாம்). நம்ம தன்மானம் சும்மா இருக்குமா? டீச்சர கொரங்குன்னு திட்டிட்டேன். அடிக்க வந்தா ஓட்டம் ஓடி ஆட்டம் காட்டினதுல முடியாம டீச்சர் ஆயாம்மா கூட என்னை வீட்டுக்கு அனுப்பிட்டாங்க. மறுநாள் மறுபடியும் எங்க அம்மா ஸ்கூல்ல கொண்டு போய் விட்டப்ப டீச்சர் ஒரே கம்பளையின்ட். எங்க அம்மா கொழந்தைங்கன்னா அப்படிதான் இருக்கும்னு டீச்சரை திருப்பித் திட்டிட்டு இந்த ஸ்கூலும் வேணாம், ஒரு மண்ணும் வேணாம்னு என்ன வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டாங்க. ஆக ஆரம்பமே வாக் அவுட்தான் நம்ம.
மறுபடியும் அடம் புடிக்கவே, அடுத்த வருஷம் என்ன அக்கா, அண்ணாவோட எலிமெண்டரி ஸ்கூல்ல (அப்பல்லாம் அப்படிதான்) போட்டாங்க, எஸ்மாடர் (ஹெட்மாஸ்டர்) பையன் சின்னவனா இருக்கானேன்னு சொல்ல, எங்க அப்பா 1 1/4 வயசு கூட்டி பொறந்த தேதி குடுத்தார். ஒடனே அவர் தலைய சுத்தி காதத் தொட சொன்னாரு (5 வயசு சமயத்துலதான் அப்படி தொட முடியும், இல்லேன்னா காது எட்டாது) நான் காதத் தாண்டி மோவாய் வரை தொட்டேன். சேத்துக்கிட்டாரு.
ஒண்ணாப்புல அமிர்தம் டீச்சர் எங்களுக்கு க்ளாஸ் டீச்சர். அவங்க கிட்ட படிக்காதவங்க பாவிங்க. அவ்வளவு அன்பு புள்ளைங்க மேல. கிறிஸ்டியன். கொண்டை போட்டு எப்பவுமே சிரிச்ச மொகத்தோட இருப்பாங்க, அடிக்கவே மாட்டாங்க. என்னை இடுப்புல தூக்கி வெச்சு பாடம் நடத்துவாங்க. உபேந்திரன்னு எனக்கு ஒரு ஃபிரண்டு. மன்த்லி டெஸ்ட்ல அரச மரம், ஆலமரம் எல்லாம் எழுத சொன்னா, நானும் அவனும் மட்டும் 1, 2 - 100 வரைக்கும் எழுதிடுவோம் (அது மட்டும்தான் தெரியும், பின்ன டீச்சரே செல்லம் கொண்டாடினா படிப்பு எப்படி வரும்). இருந்தாலும் எங்களுக்கு மட்டும் 100/100 போட்டுடுவாங்க. மத்தவங்களுக்கு தப்புக்கு ஏத்த மாதிரி மார்க் கொறயும். (இதோட வெளவு மூணாப்பு வரைக்கும் கஷ்டப்பட்டோம், கூட்டல் கழித்தல் வராம).
கிளாஸ்லேர்ந்து ஜன்னல் வழியா பாத்தா ரோட்ல போறவங்க தெரிவாங்க. எங்க அப்பாவோ அவனோட அப்பாவோ அந்தப் பக்கம் போனா, நாங்க ரெண்டு பேரும் எழுந்து நின்னு டீச்சர் அப்பா போறாங்கன்னு சொல்வோம், அவ்வளோதான். சரி நீங்க போங்கன்னு அனுப்பிடுவாங்க, அப்பாகிட்ட ஓடிப்போய் மிட்டாய் வாங்கிக்கிட்டு வீட்டுக்கு ஓடி வந்துடுவோம். எங்க அம்மா சிரிச்சுக்கிட்டே சாப்பிட சொல்லி தூங்க வெச்சுடுவாங்க. (பாட்டி இருந்தா கட்டல போறவனேன்னு முதுகுல ரெண்டு சாத்துவாங்க)
இப்படியா ஒண்ணாம்பு முடிச்சு ரெண்டாம்ப்பு போனோம்.
(தொடரும்)
தருமபுரி நினைவுகள்.
தருமபுரி (தர்ம்ப்ரி) பத்தி எனக்கு ரெண்டு வயசுலேர்ந்தே ஞாபகம் இருக்குன்னு சொன்னா நம்பணும். தர்மபுரில நான் ஆஸ்பத்திரில பொறக்காம எங்க வீட்டுல ஒரு மூலைலேயே பொறந்தேனாம். அதுனாலதானோ என்னவோ எனக்கு ஊர் மேலயும், வீட்டு மேலயும் பாசம் ஜாஸ்தி. ஊர விட்டு வந்து 33 வருஷம் ஆகியும் இன்னும் கனவுல எங்க வீடு வரும். எந்த நிகழ்ச்சி நடந்தாலும் அங்க நடக்கற மாதிரி கனவு வரும்.
எங்க தெரு 20 பிளாட்டுங்கள்ல ஒரு 30 வீடுகள் கொண்ட தெரு. BLIND STREET ங்கிற முட்டு சந்து. அதுல தெரு ஆரம்பத்துல மொதோ வீடு எங்களுது. முட்டு சந்துங்கிறதுனால தெருக் கடசில கொழந்தைங்களை எல்லாம் தைரியமா வெளயாட விடுவாங்க. சரி நம்மளப் பத்தி விஷயத்துக்கு வருவோம்.
நம்ம பால்குடி டேஸ் சுவாரஸ்யமாதான் இருந்திருக்கு. ஒரு அக்கா, அப்பறம் அண்ணன், கடைக்குட்டி நானு. பொறக்கும்போதே ஐயா வெயிட் பார்ட்டி. கஷுக்கு முஷுக்குன்னு. நம்ம பொறந்தப்ப குடும்பத்துல கொஞ்சம் கஷ்டம் (பொறக்கும்போதேவா). அதுனால பால், ஹார்லிக்ஸ், போர்ன்விட்டா மாதிரி காஸ்டலி பானங்கள் கெடயாது. ஜவ்வரிசி கஞ்சிதான். அது இன்னும் நம்மள தாட்டியா ஆக்கிடுச்சு. நம்ம உடன்பிறப்புகள் எல்லாம் பாவம், ஈர்குச்சி மாதிரி. அப்பல்லாம் ஊதுபத்தி தகரக் குழாய்லதான் வரும். அதை எடுத்துக்கிட்டு பாசத்தோட அக்காவையும் அண்ணனையும் அவங்க அலற அலற தொரத்திக்கிட்டு ஓடுவேனாம். அதுலேர்ந்து அவங்களுக்கு விடுதலை வேணும்னு அவங்களை சீக்கிரமே ஸ்கூல்ல போட்டாங்க. நமக்கு பொழுது போகல. என்ன செய்யறது. வீட்டுல இருக்கற கரண்டிகளை எடுத்து வெச்சுக்கிட்டு கூடத்துல உக்காந்துக்கிட்டு வாசப் பக்கம் இருக்கற ஜன்னல் வழியா,, ஜன்னல் கம்பில படாம THROW அடிக்க வேண்டியதுதான். யாராவது எதிர்வீட்டுக்காரங்க பாத்தா அதெல்லாம் திருப்பி வரும் வீட்டுக்கு. இல்லேன்னா அதெல்லாம் நாட்டுக்கு. நான் பெரிய கிரிக்கெட் வீரனா வருவேன்னு நெனைச்சாங்க இதை வெச்சு (எங்க, மரத்துல மாங்கா அடிக்கதான் இந்த THROW பயன்பட்டுச்சு)
எவ்வளவு நாளைக்கு இதெல்லாம் நடக்கும்? அலுப்பு தட்டிடுச்சு. நானும் ச்சூலுக்குப் போவேன்னு அடம் புடிச்சேன். நம்ம அடம் தாங்காம நர்சரி (அப்பல்லாம் எல் கே ஜி கெடையாது) ச்சூல்ல சேத்து விட்டாங்க. ச்சூலுக்குப் போன ஒடனே ஒரே ஒரு பாட்டு, நிலா நிலா ஓடி வா, அப்பறம் தூங்க வெச்சுடுவாங்க, எழுந்தவுடனே மிட்டாய் எல்லாருக்கும் குடுப்பாங்க. எனக்கு மட்டும் இல்ல. நான் டீச்சர் கிட்ட கேட்டேன். அதுக்கு உங்க அம்மாவைக் கேளுன்னு திட்டினாங்க. (ஸ்கூல்ல விடறப்ப அம்மா குடுத்துட்டுப் போனாதான் நமக்கு தருவாங்களாம்). நம்ம தன்மானம் சும்மா இருக்குமா? டீச்சர கொரங்குன்னு திட்டிட்டேன். அடிக்க வந்தா ஓட்டம் ஓடி ஆட்டம் காட்டினதுல முடியாம டீச்சர் ஆயாம்மா கூட என்னை வீட்டுக்கு அனுப்பிட்டாங்க. மறுநாள் மறுபடியும் எங்க அம்மா ஸ்கூல்ல கொண்டு போய் விட்டப்ப டீச்சர் ஒரே கம்பளையின்ட். எங்க அம்மா கொழந்தைங்கன்னா அப்படிதான் இருக்கும்னு டீச்சரை திருப்பித் திட்டிட்டு இந்த ஸ்கூலும் வேணாம், ஒரு மண்ணும் வேணாம்னு என்ன வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டாங்க. ஆக ஆரம்பமே வாக் அவுட்தான் நம்ம.
மறுபடியும் அடம் புடிக்கவே, அடுத்த வருஷம் என்ன அக்கா, அண்ணாவோட எலிமெண்டரி ஸ்கூல்ல (அப்பல்லாம் அப்படிதான்) போட்டாங்க, எஸ்மாடர் (ஹெட்மாஸ்டர்) பையன் சின்னவனா இருக்கானேன்னு சொல்ல, எங்க அப்பா 1 1/4 வயசு கூட்டி பொறந்த தேதி குடுத்தார். ஒடனே அவர் தலைய சுத்தி காதத் தொட சொன்னாரு (5 வயசு சமயத்துலதான் அப்படி தொட முடியும், இல்லேன்னா காது எட்டாது) நான் காதத் தாண்டி மோவாய் வரை தொட்டேன். சேத்துக்கிட்டாரு.

ஒண்ணாப்புல அமிர்தம் டீச்சர் எங்களுக்கு க்ளாஸ் டீச்சர். அவங்க கிட்ட படிக்காதவங்க பாவிங்க. அவ்வளவு அன்பு புள்ளைங்க மேல. கிறிஸ்டியன். கொண்டை போட்டு எப்பவுமே சிரிச்ச மொகத்தோட இருப்பாங்க, அடிக்கவே மாட்டாங்க. என்னை இடுப்புல தூக்கி வெச்சு பாடம் நடத்துவாங்க. உபேந்திரன்னு எனக்கு ஒரு ஃபிரண்டு. மன்த்லி டெஸ்ட்ல அரச மரம், ஆலமரம் எல்லாம் எழுத சொன்னா, நானும் அவனும் மட்டும் 1, 2 - 100 வரைக்கும் எழுதிடுவோம் (அது மட்டும்தான் தெரியும், பின்ன டீச்சரே செல்லம் கொண்டாடினா படிப்பு எப்படி வரும்). இருந்தாலும் எங்களுக்கு மட்டும் 100/100 போட்டுடுவாங்க. மத்தவங்களுக்கு தப்புக்கு ஏத்த மாதிரி மார்க் கொறயும். (இதோட வெளவு மூணாப்பு வரைக்கும் கஷ்டப்பட்டோம், கூட்டல் கழித்தல் வராம).
கிளாஸ்லேர்ந்து ஜன்னல் வழியா பாத்தா ரோட்ல போறவங்க தெரிவாங்க. எங்க அப்பாவோ அவனோட அப்பாவோ அந்தப் பக்கம் போனா, நாங்க ரெண்டு பேரும் எழுந்து நின்னு டீச்சர் அப்பா போறாங்கன்னு சொல்வோம், அவ்வளோதான். சரி நீங்க போங்கன்னு அனுப்பிடுவாங்க, அப்பாகிட்ட ஓடிப்போய் மிட்டாய் வாங்கிக்கிட்டு வீட்டுக்கு ஓடி வந்துடுவோம். எங்க அம்மா சிரிச்சுக்கிட்டே சாப்பிட சொல்லி தூங்க வெச்சுடுவாங்க. (பாட்டி இருந்தா கட்டல போறவனேன்னு முதுகுல ரெண்டு சாத்துவாங்க)
இப்படியா ஒண்ணாம்பு முடிச்சு ரெண்டாம்ப்பு போனோம்.
(தொடரும்)
No comments:
Post a Comment